சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் பேஸ்மாக்குக்கள்
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்
குழம்பு மஞ்சளை நன்கு அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து
கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், இந்த ஒரு முறையினாலே
சருமத்தின் கருமையை போக்கலாம்.
மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்
போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம்
சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை
நிறத்தை போக்கும்.
மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2
டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம்
மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள
கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
சருமத்தில் உள்ள
பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட வேண்டுமெனில், 1 டேபிள்
ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தயிர்
சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து
கழுவ வேண்டும்.
1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள்
சேர்த்து கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து,
முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம்
வெள்ளையாகவும் காணப்படும்.
சருமம் வெள்ளையாவதற்கு குங்குமப்பூடன்
மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு
தடவி ஊற வைத்து கழுவினால், சரும கருமை நீங்கி, முகம் உடனே பொலிவுடன்
காணப்படும்.
சில சமயங்களில் சருமத்தில் உள்ள கருமை அதிகப்படியான
இறந்த செல்கள் சரியாக நீங்காமல் இருப்பதால் ஏற்படும். எனவே இத்தகைய இறந்த
செல்களை முற்றிலும் போக்குவதற்கு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பால்
பவுடர், 1 டீஸ்பூன் பால் மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, முகத்தில்
தடவி ஸ்கரப் செய்ய வேண்டும்.
அனைவருக்குமே முல்தானி மெட்டியைப்
பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி மெட்டி பருக்கள் மற்றும்
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்க வல்லது என்பதும் தெரியும்.
ஆனால் அந்த முல்தானி மெட்டியை மஞ்சள் தூள் மற்றும் பாலுடன் சேர்த்து
கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.
இந்த
பாரம்பரிய அழகுப் பொருட்களில் ஒன்றான கடலை மாவை, மஞ்சள் தூள் மற்றும்
பாலில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கழுத்து போன்ற கருமையான
பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால்,
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் வெள்ளையாக
காணப்படும்.
மேற்கூறியவற்றை 7 நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், நல்ல பலனைப் பெறுவது உறுதி
No comments:
Post a Comment