Friday, 15 July 2016

சுரம் குணமாக...

சுரம் குணமாக...
"கண்டு பார் பித்த சுரம் பித்தவெட்டை
கலங்காதே அத்திசுரம் காணாமல் ஓடும்
கொண்டு பார் பேய்புடலும் கிராம்பு சுக்கு
கொரையான் கிழங்கு நில வேம்பு மல்லி
தண்டு மிண்டு செய்யாதே சமனாய் கொண்டு
சாதகமா நீர் வார்த்தே எட்டு ஒன்று ஆக்கி
உண்டிடவே சொன்னதொரு சுரங்கள் எல்லாம்
ஓடுமடா வான் எழிலி போலத்தானே..!"
- போகர் வைத்தியம் 700 -
பேய்புடல், கிராம்பு, சுக்கு, கோரைக் கிழங்கு, நில வேம்பு, கொத்து மல்லி ஆகியவற்றை சமனாக சேர்த்து பாத்திரத்தில் இட்டு அளவான நீரை விட்டு எட்டில் ஒன்றாக காய்ச்சி அதை அருந்தினால் பித்த சுரம், பித்த வெட்டை, அதிசுரம் ஆகிய நோய்கள் தீரும்,அத்துடன் சுரங்கள் எல்லாம் தீரும். இதற்க்கு பத்தியம் ஏதும் சொல்லப்படவில்லை அத்துடன் ஒருதடவை அருந்தினால் போதும் என்றே சொல்லப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment